மேலும்

வடமராட்சிக் கடலேரியில் மழைநீரைத் தேக்கி குடாநாட்டுக்கு குடிநீர் வழக்க புதிய திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு குடிநீர் வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. 78 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வடமராட்சி கடலேரியில், ஆண்டு மழைவீழ்ச்சியில் 20 சதவீதத்தை தேக்கி வைத்து, அதனை குடிநீர்த் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரிடம் விரைவான முன்னேற்றங்களை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும், முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு வருமாறும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டையை மாற்றுவதே தமது இலக்கு என்கிறது சீன நிறுவனம்

பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டியெழுப்புவதே, தமது நோக்கம் என்று சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

யாழ். அல்லது திருமலையில் ஆந்திர அரசின் சிறப்பு பொருளாதார வலயம்- விரைவில் உடன்பாடு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் சிறிலங்காவில் கைத்தொழில் நடைக்கூடம் ( industrial corridor ) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து யாழ். படைத் தளபதியுடன் சுவிஸ் அதிகாரிகள் ஆலோசனை

வடக்கில் முன்னாள் போராளிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான சவால்கள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார்.

மீண்டும் தேசிய சாதனையைப் படைத்தார் வடக்கு வீராங்கனை அனிதா (படங்கள்)

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் என்ற வீராங்கனை சிறிலங்காவின் 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவில், கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

எந்த நாட்டின் அகதிகளுக்கும் சிறிலங்காவில் அனுமதியில்லை- பிரதமர் ரணில்

எந்த நாட்டில் இருந்து வந்தாலும், அடைக்கலம் கோரும் அகதிகளை சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா உதவிச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சந்திப்பு

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரன்கோவுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 26 முதல் மூன்று மாகாணசபைகளும் ஆளுனர்களின் கையில் – மார்ச்சில் தான் தேர்தல்

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகள், செப்ரெம்பர் 26ஆம் நாளுக்குப் பின்னர் ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று இங்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்காவின் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை – முக்கிய அம்சங்கள்

புதிய அரசியலமைப்பு உருவாக்குவ தற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.