குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்ட சகோதரர்கள், பெண் கைது
ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இரண்டு விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் மூத்த சகோதரர் வாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் முகத்தை முகத்தை மூடி உடைகளை அணிவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு உதவுவதற்காக இந்தியா தனது சிறப்புப் படையான என்எஸ்ஜி எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்முனை – சாய்ந்தமருதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில், காயங்களுடன் மீட்கப்பட்ட பெண், மற்றும் குழந்தை, சஹ்ரான் காசிமின் மனைவி மற்றும் குழந்தை, என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ், தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதேய் மிலாது இப்ராஹிம் ( Jamathei Millathu Ibraheem (JMI) ஆகிய அமைப்புகளை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைப் பிரதேசத்தில் நேற்று மாலை ஐ.எஸ் அமைப்பின் முறைவிடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளில் குறைந்தது15 பேர் உயிரிழந்தனர்.