இரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தடை
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ், தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதேய் மிலாது இப்ராஹிம் ( Jamathei Millathu Ibraheem (JMI) ஆகிய அமைப்புகளை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு இந்த அமைப்புகளே காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையிலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதற்கமைய, இந்த இரண்டு அமைப்புகளினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஏனைய அடிப்படைவாத மத அமைப்புகளை தடை செய்வது குறித்தும் ஆராயப்படுவதாகவும், சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.