சிறிலங்காவுக்கு என்எஸ்ஜி கொமாண்டோக்களை அனுப்ப தயார் நிலையில் இந்தியா
சிறிலங்காவுக்கு உதவுவதற்காக இந்தியா தனது சிறப்புப் படையான என்எஸ்ஜி எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து, பல்வேறு நாடுகளும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றன.
இந்த நிலையில், சிறிலங்காவுக்கு உதவி தேவைப்பட்டால், சிறப்பு படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சியே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Sir Lanka இனி பொது சொத்து