மேலும்

வாள்களுடன் சிக்கினார் தற்கொலைக் குண்டுதாரிகளின் அண்ணன்

கொழும்பில் இரண்டு விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் மூத்த சகோதரர் வாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட மகாவில வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த போது சிறப்பு அதிரடிப்படையினர் மொகமட் இப்ரான் அகமட் என்ற நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து, ஜேர்மனி தயாரிப்பான air gun எனப்படும் காற்றழுத்தத்தினால் இயங்கும் துப்பாக்கி, இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஷங்ரி-லா மற்றும் சினமன் கிரான்ட் விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களான இன்சாப் அகமட் மற்றும் இல்ஹாம் அகமட் ஆகியோரின் மூத்த சகோதரரே இவரார்.

இவர்களின் தந்தையான வர்த்தகர் மொகமட் இப்ராகிம், ஏற்கனவே தெமட்டகொடவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 6 ஆண்கள் உள்ளிட்ட 9 குழந்தைகள் உள்ளனர்.

இவருடன் ஏற்கனவே, இரண்டு மகன்மார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மகனுளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு மகனை கைது செய்வதற்கு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *