மேலும்

முகத்தை மூடும் உடைகளுக்கு சிறிலங்காவில் இன்று முதல் தடை

சிறிலங்காவில் முகத்தை முகத்தை மூடி உடைகளை அணிவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்ட  விதிகளின் கீழ் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை நேற்றிரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தடை இன்று தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடையாளம் காண முடியாதவாறு முகத்தை மூடி உடைகளை அணிய முடியாது.

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா போன்ற உடைகள் இந்த தடையின் கீழ் வருகின்றன.

அதேவேளை, சிறிலங்காவில் பல இடங்களில் புர்கா அணிவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த தடையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *