இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை – என்கிறது சிறிலங்கா
சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், அதற்கு முஸ்லிம்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தாம் ஆட்சிக்கு வந்தால், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துடன், சீன நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள உடன்பாடுகள் செல்லுபடியற்றதாகி விடும் என்று ஐதேக எச்சரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், உடனடியாகவும், நிபந்தனைகளின்றியும் சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.