மேலும்

பிரிவு: செய்திகள்

மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்

தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு தெரிவித்துள்ளது.

அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை – தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர்

இந்திய வெளிவிவகாரச் செயலராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் எட்டுமாதங்களால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் மட்டும் பிரதம நீதியரசராக இருப்பார் சிராணி பண்டாரநாயக்க

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சிராணி பண்டாரநாயக்க நாளை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் ஒப்படைப்பார் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் வந்தார் சிராணி பண்டாரநாயக்க – குழப்பத்தில் சிறிலங்கா நீதித்துறை

சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மீண்டும் பொறுப்பேற்பதற்காக – முன்னைய அரசாங்கத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 43வது பிரதம நீதியரசர்  சிராணி பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற வளாகத்துக்கு தற்போது வருகை தந்துள்ளார்.

அகதிகளை திருப்பி அழைப்பது குறித்து இந்திய – சிறிலங்கா பேச்சுக்கள் வெள்ளியன்று ஆரம்பம்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவும் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்கா உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்தவைத் தோற்கடிக்கும் திட்டத்தில் நிமால் சிறிபாலவும் பங்கெடுத்தார் – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்கும், திட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் அங்கம் வகித்திருந்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார்.