சூடுபிடிக்கும் சிறிலங்கா அரசியல் களம் – அடுத்தது என்ன?
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரவிரவாக நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தினர்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவினால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நௌருவில் இருந்து கம்போடியாவில் குடியேற்றும் திட்டத்துக்கமைய, முதல் தொகுதி அகதிகளை நொம்பென்னுக்கு அனுப்பும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கம்போடியாவில் குடியேற்றப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அகதிகளின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தொகுதிவாரி தேர்தல் முறையை விட விகிதாசாரத் தேர்தல் முறை கூடுதல், ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்றும், வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்குமுறை சிறந்தது என்றும், கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சிறிலங்காவின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.