மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா அதிபரை சந்தித்தார் ஜோன் கெரி – தேர்தல் வெற்றிக்கு நேரில் வாழ்த்து

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கெரி வருகைக்கு முன்பாக மகிந்த ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவரும், அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அவரைத் தோற்கடிக்க, சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்தவருமான, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி நேற்று கொழும்பில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  பயணம் செய்த  போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன் கெரியுடன் சிறிலங்காவுக்கு படையெடுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரிகள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளனர். 

பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.

நாளை காலை சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜோன் கெரி

இரண்டு நாள் பயணமாக இன்று காலை 7.45 மணியளவிவில் சிறிலங்காவை வந்தடையவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சற்று நேரத்தில் கொழும்பை வந்தடைகிறது ஜோன் கெரியின் விமானம்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானம் நேற்று  அதிகாலையில் வொசிங்டனில் இருந்து புறப்பட்டது.

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.

சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் சோமவன்ச அமரசிங்க

ஜேவிபியின் முன்னாள் தலைவரும், அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான சோமவன்ச அமரசிங்க கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.