சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் சோமவன்ச அமரசிங்க
ஜேவிபியின் முன்னாள் தலைவரும், அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான சோமவன்ச அமரசிங்க கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அதிபரை வலியுறுத்தியே அவர் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு, சதியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.