சிறிலங்கா அதிபரை சந்தித்தார் ஜோன் கெரி – தேர்தல் வெற்றிக்கு நேரில் வாழ்த்து
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி மாதம் 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், வெற்றிபெற்றதற்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் நேரில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.