மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சியோல் விமான நிலைய கழிவறையில் தொலைந்த கடவுச்சீட்டு – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதி

ஒன்றுகூடல் ஒன்றுக்குச் சென்றிருந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான நிலையக் கழிவறையில் தனது கடவுச்சீட்டைத் தவறவிட்டதால், தென்கொரியாவில் நடந்த, அந்த ஒன்றுகூடலின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் பங்கேற்க முடியாது போனது.

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முடிவு இல்லையாம் – சுதந்திரக் கட்சி கூறுகிறது

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான எந்த முடிவையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்று, அந்தச் கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாளை ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஒஸ்ரியா செல்லவும் திட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாளை ஜேர்மனிக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு அமைப்பாளர் பதவி – ஐதேகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மகிந்தவை மின்சார நாற்காலியில் இருந்து பாதுகாத்தேன் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்சவை மிக்சார நாற்காலியில் இருந்து தாமே பாதுகாத்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தம்

லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக, சிறிலங்கா கடற்படையின் விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

படையினரைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவோம் – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா படையினரை பாதுகாப்பதாக  சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்படும் என்றும்  தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.

சிறிலங்காவில் புலனாய்வு இதழியலை ஊக்குவிக்க 5 இலட்சம் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

புலனாய்வு இதழியலை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், சிறிலங்காவில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு, அமெரிக்கா ஐந்து இலட்சம் டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது.

சுமந்திரனின் சட்டமூலத்தை மாகாணசபைகளின் ஒப்புதலுக்கு அனுப்புகிறார் சபாநாயகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட, அடிமடி வலைகளைப் பயன்படுத்தி இழுவைப் படகு மூலம் மீன்பிடித்தலைத் தடைசெய்யும், சட்டமூலத்தை, மாகாணசபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.