இருதரப்பு பேச்சுக்களை அடுத்தே துறைமுக நகரத் திட்டத்துக்கு பச்சைக்கொடி – மலிக் சமரவிக்கிரம
வெற்றிகரமாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, சீன நிறுவனத்தின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்ததாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.