மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவின் கணினி அறிவு புள்ளிவிபரங்கள் – இரண்டாம் இடத்தில் வடக்கு மாகாணம்

சிறிலங்காவின் சனத்தொகையில்,  5 வயதுக்கும், 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில், நான்கில் ஒருவர் கணினி அறிவு கொண்டவர்களாக இருப்பதாகவும், ஒவ்வொரு 100 வீடுகளிலும், 22 வீடுகளில், தலா ஒரு கணினியாவது இருப்பதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம்  தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்றும், சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சந்திரிகா தலைமையிலான ஆணைக்குழு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் – சம்பந்தன் நம்பிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அதிபர் ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா புலனாய்வு பிரிவினால் எந்நேரமும் கண்காணிக்கப்படும் முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், எந்தவொரு அரச விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடாத போதிலும், தாம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, கண்காணிக்குக்குள்ளாக்கப்படுவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களைத் தொடர சீன நிறுவனங்களுக்கு சிறிலங்கா அனுமதி

சீனாவுடன் இணைந்து வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று சிறிலங்காவுக்கு வருகிறார்

சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மே 05ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு, ஜூன் 27இல் தேர்தல்?- ஆங்கில வாரஇதழ் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் மேமாதம் 05ம் நாள் கலைக்கப்பட்டு ஜூன் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை – இராஜதந்திர வெற்றி என்கிறது சிறிலங்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நீடித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.