மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சாவகச்சேரி வெடிபொருள் விசாரணைகளில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடாது – பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.

எதையும் எதிர்கொள்ள சிறிலங்காப் படையினர் தயார் – யாழ். படைகளின் தளபதி

வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் இரண்டாவது மனைவியே வெடிபொருட்களைக் காட்டிக் கொடுத்தார்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவியே தகவல்களை சிறிலங்கா காவல்துறைக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முனைவதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில், மிகக் குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்.

நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.

சீனாவுடன் பல்வேறு முக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் ரணில்

அடுத்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணத்தின் போது, சீன அதிகாரிகளுடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடும் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இனி அடுத்தடுத்து கொழும்பு வரும் – அமெரிக்கத் தூதுவர் சூசகம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்களின் முடிவை அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா அதிபர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள சிறிலங்கா கடற்படை

சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.