மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

தேஜஸ் போர்விமான கொள்வனவு குறித்து முடிவு எடுக்கவில்லை – சிறிலங்கா விமானப்படை

இந்தியாவிடமா, பாகிஸ்தானிடமா அல்லது வேறு நாட்டிடம் இருந்தா போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற ஆசனம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு 31 மில்லியன் டொலர் நிதியுதவி – அமெரிக்கா அறிவிப்பு

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 31 மில்லியன் டொலர் (சுமார் 4350 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கும் திட்டம் ஒன்றை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, முன்வைத்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைக்கிறது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் அனைவரும் இறந்து விட்டனர்- உறுதிப்படுத்துகிறார் கோத்தா

காணாமற்போனவர்களில் சிலர் கனடாவிலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வாழ்வதாகவும், ஏனையோர் அனைவரும் இறந்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு ஐ.நா கோரமுடியாது – மனித உரிமை ஆணையாளர்

தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர முடியாது என்றே தாம் குறிப்பிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதாக, நம்ப முடியாததாக, நிலையற்றதாக இருப்பதால் தான், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அனைத்துலகப் பொறிமுறை தேவையில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மகாநாயக்கர்

உள்ளக பொறிமுறைகளின் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அனைத்துலகப் பொறிமுறைகள் தேவையில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு நாளை வெளியாகும்?

சிறிலங்கா அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கொழும்பில் நாளை நடத்தவுள்ள ஊடக மாநாட்டில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.