மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமெரிக்காவில் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தும் சிறிலங்கா நிதி அமைச்சர்

அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்காசியா வேகமான வளர்ச்சி; சிறிலங்கா வேகமான வீழ்ச்சி- எச்சரிக்கும் உலக வங்கி

தெற்காசியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு, 6.9 வீதமாக குறைவடையும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  

போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.

தமிழருக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்முறைகள் – பாதுகாப்புச் சபையில் பான் கீ மூன் அறிக்கை

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும், பாலியல் ரீதியான வன்முறைகள் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் நடத்தும் இரண்டு போராட்டங்கள் – ரைம் சஞ்சிகை கருத்து

சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடினமான பணியை ஆற்றிக் கொண்டிருப்பதாகவும், ஒரு புறம் அவர், ஜனநாயகத்தை மீளக் கொண்டு வரவும் மறுபுறத்தில் பிரதான வல்லாதிக்க சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கும் போராடி வருவதாகவும் ரைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சென்னையில் இலங்கைத் தமிழ் பிரமுகர்களுடன் சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், சென்னையில் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மனித உரிமைகள், ஜனநாயகம், பொறுப்புக்கூறல் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சு

சிறிலங்கா அரசாங்கத்துடன், மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் குறித்து, அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

செப்ரெம்பருக்குப் பின்னரே உள்நாட்டு விசாரணை – இழுத்தடிக்கத் தொடங்கியது சிறிலங்கா

சிறிலங்காவில் போரின் போது இடம் பெற்ற மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, உள்நாட்டு விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படாது என்றும், வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் முடிந்த பின்னரே அது ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை இராணுவ முகாமில் அடைக்குமாறு கேட்டுக் கொண்டேன் – என்கிறார் கோத்தா

தன் மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும், அதிபர் தேர்தலை அடுத்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நிராகரித்துள்ளார்.

நன்றாக கையாளப்பட்டால் சிறிலங்கா உலகிற்கு முன்னுதாரணமாக அமையும் – ஐ.நா நிபுணர்

நன்றாக கையாளப்பட்டால், பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும், நிலையான அமைதியை எட்டுவது என்பதில் சிறிலங்கா விவகாரம் ஒரு முன்னுதாரணமானதாக இருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.