மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அதிபர்

தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு சூழலிலும், சமஷ்டித் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து வராது – கோத்தா உறுதி

தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச  நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு மீண்டும் உறுதியளித்தார்.

19 நீக்கம், நாடாளுமன்ற கலைப்பு, மாகாண சபை தேர்தல் –  கோத்தாவின் பதில்கள்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்சிசி உடன்பாட்டை ஆராய விரைவில் குழு நியமனம்

எம்.சி.சி உடன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக  ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராக சஜித் – ரணிலுக்கு ஐதேக மீளமைப்புக்குழு  பரிந்துரை

அடுத்த பொதுத் தேர்தலில் ஐதேகவின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துமாறு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஐதேக மீளமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

பிறரின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம் – ஜப்பானிடம் கூறிய கோத்தா

உலக வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகளில் ஈடுபட சிறிலங்கா விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, “நாங்கள் நட்பை நாடுகிறோம், மற்றவர்களின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய இருவர் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய இரண்டு பேர் நேற்றிரவு குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிசாந்த சில்வாவை நாடு கடத்துமாறு கோரவுள்ள சிறிலங்கா

முன்னறிப்பு இல்லாமல் சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை நாடு கடத்துவது குறித்து கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

எம்சிசி உடன்பாடு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவில்லை – டலஸ்

அமெரிக்காவின் எம்சிசி கொடை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்று, இணை அமைச்சரவைப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

துறைமுக அதிகார சபை தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.