மேலும்

எம்சிசி உடன்பாட்டை ஆராய விரைவில் குழு நியமனம்

எம்.சி.சி உடன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக  ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே  அவர், இதனைத் தெரிவித்தார்.

“இந்த ஆவணம் என்ன என்பதை அந்தக் குழு ஆராயும். ஏதேனும் நன்மை இருக்கிறதா -இல்லையா என்று அறிய முதலில், நாம் அதைப் படிக்க வேண்டும்.

அது என்னவென்று எனக்குத் தெரியவேண்டும். அதற்காக நாங்கள் விரைவில் ஒரு குழுவை நியமிப்போம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *