மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான துறைகள், நிறுவனங்கள். குறித்த அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ரொஷிமிட்சு மொடேகி இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு  – மைத்திரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்த முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளரின் வாக்குமூலம் – நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சுவிஸ் தூதரகப் பணியாளரிடம் இன்றும் தொடர் விசாரணை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும், கொழும்பில் உள்ள சுவிஸ்  தூதரக பணியாளரிடம், இன்று மூன்றாவது நாளாகவும், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

மூதூரில் முன்னாள் போராளிகள் 4 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரணிலின் ஐதேக தலைவர் பதவிக்கும் ஆப்பு

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஐதேக தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமத் குரேஷி இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

நிசாந்த சில்வாவை நாடு கடத்த மறுத்ததா சுவிஸ்?- தூதரகம் அறிக்கை

சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை, நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராய்வு

சிறிலங்காவில் இடைக்கால அரசாங்கம் கடந்த வாரம் பதவிக்கு வந்த பின்னர், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் முதல்முறையாக நேற்று நடைபெற்றுள்ளது.