மேலும்

வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய இருவர் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய இரண்டு பேர் நேற்றிரவு குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம்  10ஆம் நாள், சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர், அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்த செய்தியாளர் சந்திப்பில், வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்ரனி டக்ளஸ் பெர்னான்டோ மற்றும் அதுல சஞ்சய மதநாயக்க ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் சாரதி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரும், கடத்தலில் இருந்து உயிர் தப்பியதாக கூறிய ஒருவரும் அந்த செய்தியாளர் சந்திப்பில் பல அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அவரது செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *