மேலும்

துறைமுக அதிகார சபை தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபராக பதவியேற்ற பின்னர் அரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள், பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே துறைமுக அதிகாரசபைத் தலைவராக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், சிறிலங்காவின் 20 ஆவது இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். 2015ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர், அரச உயர்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் தயா ரத்நாயக்க, துறைமுக அதிகார சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *