மேலும்

பிறரின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம் – ஜப்பானிடம் கூறிய கோத்தா

உலக வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகளில் ஈடுபட சிறிலங்கா விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, “நாங்கள் நட்பை நாடுகிறோம், மற்றவர்களின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடேகி ரொஷிமிட்சுவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

வெளிப்படையான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியம் என்ற கொள்கை விடயத்தில்  ஜப்பான் உறுதியாக இருப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியன பிராந்திய ஒத்துழைப்பின் முன்னுரிமையான விடயங்களாக இருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியப் பெருங்கடல் எந்தவொரு மோதலும் இல்லாத அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும். ” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *