மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

காங்கேசன்துறையில் அனைத்துலக உறவுகளுக்கான நிலையம் – கட்டுமானப்பணிகளை தொடர அனுமதி

காங்கேசன்துறையில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அதிபர் மாளிகையின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சிறிலங்காவின் 234 உள்ளூராட்சி சபைகளினது ஆயுள்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19வது அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஏப்ரல் 23இற்குப் பின்னர் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் – ரவி கருணாநாயக்க

தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவேன் – மகிந்த ராஜபக்ச

தாம் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பலரின் அதிகாரங்களைக் குறைத்த சிறிலங்காவின் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று புதிய அமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கிய போது, ஏற்கனவே அமைச்கர்களாக இருந்தவர்களிடம் இருந்து சில பொறுப்புகளை மீள எடுத்துக் கொண்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை மீறினார் ஜனாதிபதி மைத்திரி

தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்துக்குள் உள்வாங்கியுள்ளதை அடுத்து, சிறிலங்காவின் அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

மைத்திரி, ரணில், சந்திரிகா இன்று யாழ். பயணம் – ஒரு தொகுதி காணிகளை ஒப்படைப்பராம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சற்றுமுன் பீல்ட் மார்ஷலாக உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பீல்ட் மார்ஷல் தரத்துக்குப் பதவிஉயர்த்தப்பட்டார்.

26 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்

சிறிலங்காவில் மேலும் 26  அமைச்சர்கள் இன்று புதிதாகப் பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.