மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

உக்ரேன் ஆயுத விற்பனை விசாரணையில் மகிந்தவும் சிக்கலாம்

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் விசாரணைகளில் சிக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரத் திட்டம்: சீனாவுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை – சிறிலங்கா

சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று, சீன அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, சீன அமைச்சரை மேற்கொள்காட்டி வெளியான செய்திகளை சிறிலங்கா நிராகரித்துள்ளது.

மகிந்தவை நாங்கள் தோற்கடிக்கவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறது பிரித்தானியா

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக, பிரித்தானிய, அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றியதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் நிராகரித்துள்ளார்.

இந்தியப் போர்க்கப்பல்கள் திருக்கோணமலைக்கு வருகின்றன

மூன்று நாள் பயணமாக இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படையணியைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்

கோடரியால் தலையில் வெட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில், பொலன்னறுவவில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டுகிறார் சிறிலங்கா பிரதமர் ரணில்

வடக்கு மாகாண நிலவரங்களை நேரில் மதிப்பீடு செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தொடக்கம், மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். யாழ். நாகவிகாரையில் வழிபாட்டுடன், அவரது வடக்கிற்கான பயணம் ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு படுகாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான, பிரியந்த சிறிசேன இன்று மாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், பொலன்னறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரியின் தடையை மீறி இரத்தினபுரிக் கூட்டத்தில் குவிந்த சுதந்திரக் கட்சியினர்

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலி்யுறுத்தி, இரத்தினபுரியில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி விதித்திருந்த தடையை மீறி, அந்தக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மகிந்தவின் மருமகனுக்கு எதிராக அனைத்துலக விசாரணை

உக்ரேனில் உள்ள பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஸ்யாவுக்கான சிறிலங்காவின்  முன்னாள் தூதுவர், உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளது.

இரத்தினபுரி மகிந்த ஆதரவுப் பேரணியில் தடையை மீறுவராம் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் இன்று இரத்தினபுரியில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளன.