மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

காணாமற்போனோர் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்கிறதாம் அதிபர் ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாளப் பட்டியைக் காணவில்லையாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு வந்தார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஐந்து நாள் பயணமாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரவேற்றார்.

சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கியாலேயே ரவிராஜ் படுகொலை – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர்,இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற  செயலாளர் தம்மிக திசநாயக்கவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வடக்கின் சீரழிவுகளுக்கு மகிந்த ஆட்சியே காரணம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம், அவர் இனவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் பேச்சு

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எதிர்க்கட்சியின் இனவாத நிகழ்ச்சி நிரல்- பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ரணில்

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பின்னணியில், இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி பதவிஇறக்கம்

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.