மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மலையகத் தமிழர் நலனுக்காக உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி

மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று தமிழ்க்கட்சிகள் இணைந்து- தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ்மக்களின் நலனுக்காக இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி – மகிந்த அணியை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறையினரை கல்எறிந்து கொல்லப்போவதாக எச்சரித்த மகிந்தவின் சகாவிடம் விசாரணை

மகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி வரும் 5ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், வரும் 5ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஒபாமாவின் சிறிலங்கா பயணம் – ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக. சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிராந்தியிடம் இரகசிய இடத்தில் விசாரணை – மகிந்த போட்ட திட்டம் பிசுபிசுப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் இன்று இரகசிய இடமொன்றில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.