மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பிரகீத் கடத்தல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைமைக்குத் தெரியாதாம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா அறிக்கை குறித்து சுதந்திரக் கட்சி, ஐதேக உயர்மட்டங்களில் ஆலோசனை

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை குறித்து, ஆராய்வதற்காக சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.

உள்நாட்டு விசாரணைக்கு அனுமதியுங்கள் – அமெரிக்கா, உறுப்பு நாடுகளுக்கு சிறிலங்கா அவசர கடிதம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக , அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்குப் பதிலாக, உள்நாட்டு விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடமும், அமெரிக்காவிடமும், அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

கலப்பு நீதிமன்ற விவகாரம் – நாடாளுமன்றில் அவசர விவாதம் நடத்தக் கோருகிறார் விமல் வீரவன்ச

போர்க்குற்றங்கள் குறித்து கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மனுவொன்றைக் கையளித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.

கொழும்பில் தனிச் செயலகம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், சிறப்பு செயலகம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்காவும் பச்சைக்கொடி?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது  என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டாராம் மகிந்த

ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, எந்தவழியிலும் தான் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகு

கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரித்துள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றம் குறித்து ஜனவரியிலேயே தீர்மானம் – மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான வரும் ஜனவரி மாதமே முடிவு செய்யப்படும் என்று  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரிடம் ஆறு மணிநேரம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் அருண வன்னியாராச்சியிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.