மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அரசியல் கைதிகள் நாளை மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கின்றனர்

தமது விடுதலை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்திருந்த வாக்குறுதி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

32 தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுநாள் விடுதலை – விஜேதாச ராஜபக்ச அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 தமிழ்க் கைதிகள் நாள் மறுநாள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் பிடிபட்டசினைப்பர் வீரர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றவில்லையாம்

மாலைதீவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும், சினைப்பர் அணி சிப்பாய் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு குறித்து விரைவில் முடிவு – கூட்டமைப்பிடம் மைத்திரி உறுதி

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது தொடர்பாக விரைவில் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

62 அரசியல் கைதிகளை இரண்டு கட்டங்களை விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானை டிசம்பர் 10 வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, அடுத்த மாதம் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அதிபர் மௌனம் – நாடாளுமன்றில் செல்வம் விசனம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வாக்குறுதி விடயத்தில் சிறிலங்கா அதிபர் இன்று வரை மௌனம் சாதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உறவு சிறிலங்காவுக்கு முக்கியம் – அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

சீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக்கொள்வது மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின், நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

படகு வெடிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு இளைஞரை நாடுகடத்தியது சிறிலங்கா

மாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவரை, சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் கைது செய்து, மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளது.