மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பிணை வழங்குவது அரசியல்வாதிகளின் வாக்குறுதியாம் – கைவிரித்தது சட்டமா அதிபர் திணைக்களம்

அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுவிப்பதாக அரசியல்வாதிகளே வாக்குறுதி வழங்கியதாகவும், அதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் கைவிரித்துள்ளார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.

மீண்டும் வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு – அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை

தீபாவளிக்கு முன்னதாக- முதற்கட்டமாக 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதாக, வழங்கியிருந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய சிறிலங்கா அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகினார்

அவன் கார்ட் சர்ச்சையில் சிக்கிய, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பதவியை விட்டு விலகியுள்ளார்.

கொழும்பு வந்தது சோபித தேரரின் உடல் – வரும் 12ஆம் நாள் தேசிய துக்க நாளான பிரகடனம்

சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் காலமான, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொன்சேகா இல்லாவிட்டாலும் போரை வென்றிருப்பேன் – என்கிறார் கோத்தா

பாதுகாப்பு செயலாளராக தான் பதவியில் வகித்திராவிடின், போர் முடிவுக்கு வந்திருக்காது என்றும், சரத் பொன்சேகா இல்லாவிட்டாலும் கூட, தனது தலைமையில் போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின்  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வாக்குறுதி வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மர்மப்பொருள் விழும் நாளில் விமானங்கள் பறக்க, மீன்பிடிக்கத் தடை?

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ஆம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திலக் மாரப்பன குறித்து இன்று முக்கிய முடிவு – ரணில், மைத்திரி தனியாகச் சந்திப்பு

அவன் கார்ட் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்ட சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தொடர்பாக இன்று இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளகப் பொறிமுறையில் மன்னிப்பும், தண்டனையும் முக்கியம் – என்கிறார் மக்ஸ்வெல் பரணகம

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான  விசாரணைப் பொறிமுறையில் மன்னிப்பு மற்றும் தண்டனை ஆகிய இரண்டு அம்சங்களும் இடம்பெற வேண்டும்  என்று காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் பகிரங்கமாக வெடித்தது மோதல்

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம், தொடர்பாக சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் நிலவிய முரண்பாடுகள் பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.