மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஒபாமாவின் சிறிலங்கா பயணம் – ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக. சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிராந்தியிடம் இரகசிய இடத்தில் விசாரணை – மகிந்த போட்ட திட்டம் பிசுபிசுப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் இன்று இரகசிய இடமொன்றில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சிராந்தி ராஜபக்சவிடம் நாளை விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள்  குறித்து விசாரித்து வரும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்பாக, சிராந்தி ராஜபக்ச நாளை முன்னிலையாகவுள்ளார். சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பு அதிகாரி அனோமா வெலிவிற்ற இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் கோரிக்கை – ரணிலுக்கு அறிவுரை கூறிய அஸ்கிரிய பீடாதிபதி

வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், இத்தகைய கோரிக்கைகள் விடயத்தில் அரசாங்கம் விவேகத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய தூதுவர் வடக்கில் மூன்று நாள் ஆய்வுப் பயணம்

சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற ஜேம்ஸ் டௌரிஸ், வடக்கு மாகாணத்தில் மூன்று நாள் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அனுராதா மிட்டல்

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீதித்துறை சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஒக்லண்ட் நிறுவனம் என்ற கலிபோர்னியாவைத் தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டல் தெரிவித்துள்ளார்.

புலிகள் மீண்டும் தலையெடுக்கும் ஆபத்து இருக்கிறதாம் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணையக் கூடிய-  நாட்டில் தீவிரவாதம்  தலையெடுக்கும் ஆபத்து இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் – முதலமைச்சர் குற்றச்சாட்டு

வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆராய புதிய குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த, இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.