மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வீதித்தடுப்பை உடைத்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகாயம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நடத்தப்பட்ட கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, தடுப்புகளை உடைத்துச் செல்ல முயன்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் ஒருமனதாக நிறைவேறியது

தகவல் உரிமைச் சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒருமனதாக- வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்ட மூலம் மீதான விவாதம் ஆரம்பமானது.

கொத்தணிக் குண்டுகள் குற்றச்சாட்டு – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நழுவலான பதில்

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ரஞ்சன் ராமநாயக்க – மகிந்தானந்த கைகலப்பு

சிறிலங்காவின் பிரதி்அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேக்கும் இடையில் நாடாளுமன்ற அவைக்கு வெளியே நேற்று கைகலப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு

சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரும் கம்மன்பிலவின் மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான, உதய கம்மன்பில, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதித்தால் ஆபத்தாக அமையும் – சரத் பொன்சேகா

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதிப்பது, சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகணைப் போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய உதவியுடன் திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரியது சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ள சிறிலங்கா காவல்துறை, அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.