மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

புதிதாக 70 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பம்

சிறிலங்காவில் சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்,  சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – சிறிலங்கா அதிபர் உறுதி

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாகவும், சர்ச்சைக்குரிய நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதாகவும், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

வரிகள் குறித்து அமெரிக்காவுடன் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வரிகள் தொடர்பாக இன்னமும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் பணி ஆரம்பம்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.

ஷசீந்திர ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சின் அரசியல் தலையீடு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் தலையீடு செய்வதாக, தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  குற்றம்சாட்டியுள்ளார்.

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய சகோதரி கோரிக்கை

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

என்பிபியின் வங்கிக்கணக்கில் ஊதியம்- சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த ஊதியம்,  கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில், வைப்பிலிடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சட்டவாளர்  ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரை பதவி நீக்க சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து, தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தியாவுடனான உடன்பாடுகளை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி

இந்தியாவுடன் சிறிலங்கா அண்மையில் கையெழுத்திட்ட  ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை செல்லுபடியற்றவையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்ய்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.