மேலும்

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலக சிறிதரன் மறுப்பு

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசு கட்சியின்  அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8.30 மணி வரை இடம்பெற்றுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் இருந்து  தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரனை அரசியல் குழுவின் கடந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை வலியுறுத்தியிருந்தனர்.

எனினும் அதற்கு சிறிதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவி குறித்து தானே முடிவெடுப்பேன் என்றும், அது தன்னுடைய சுயாதீன முடிவு என்றும், பதவி விலகமாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளதுடன்,   தான் எந்தத் தவறும் இழைக்கவேயில்லை என்றும் வாதிட்டுள்ளார்.

அத்துடன் தம்மை பதவி விலக உத்தரவிடுவதற்கு அரசியல் குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இழுபறிகளினால், நேற்றைய கூட்டத்தின் முடிவில் ஊடகச் சந்திப்பு எதுவும் நடத்தப்படவில்லை.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு  கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் அரசியல் குழுவின் பணிப்பை ஏற்க மறுத்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுதொடர்பாக தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாகவும், அது பற்றி உரியநேரத்தில் அறிவிப்போம் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *