மேலும்

ஐ.நாவிற்குப் புறப்பட்டார் அனுர- ஜப்பானுக்கும் பயணம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் அவர் நாளை பிற்பகல் 3.15 மணியளவில் (உள்ளூர் நேரம்) உரையாற்றவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஐ.நா பொதுச் செயலரையும், பல நாடுகளின் தலைவர்களையும் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐ.நா பொதுச்சபை அமர்வுக்குப் பின்னர், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, சிறிலங்கா அதிபர் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *