இன்று காலை அவசரமாகக் கூடுகிறது சுதந்திரக் கட்சி மத்திய குழு
பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்று தெரிய வருகிறது.
ஏற்கனவே, ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.