வெலிக்கடையின் ‘எஸ்’ விடுதி புனரமைப்பு – முக்கிய பிரமுகர் கைதுக்கு முன்னேற்பாடு
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயகுமாரணதுங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையின் ‘எஸ்’ விடுதி, புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய பிரமுகர் அல்லது உயர் அதிகாரிகளை அடுத்து கைது செய்யும் நடவடிக்கையாகவே இந்த விடுதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக பரவலான ஊகங்கள் எழுந்துள்ளன.
வெலிக்கடைச் சிறைச்சாலையின் ‘எஸ்’ விடுதியிலேயே முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதே விடுதியில் தான் முன்னர், சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரணதுங்கவும் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த விடுதி புனரமைக்கப்பட்டுள்ளதால், முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்த கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.