மேலும்

சிறைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்தும் யோசித – சட்டைப்பையில் இருந்து விழுந்ததால் சிக்கல்

yoshitha-arrest- rajapaksha family (1)வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவிடம் கைத்தொலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது தந்தையான மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து விட்டு, சிறைக்கூண்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, யோசித ராஜபக்சவின் சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்துள்ளது.

எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாம் அறியவில்லை என்று, சிறைச்சாலைகள் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் கிடைத்தால், பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், வாக்குமூலங்களை அளிக்க இரண்டு அதிகாரிகள் தயாராக இருப்பதாக, சிறைச்சாலையில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *