மேலும்

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார் என, புதுடெல்லியில் இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவில் கோத்தாபய ராஜபக்ச புதிய அதிபராகப் பதவியேற்ற ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்திய கடற்படைத் தளபதி கொழும்பு செல்லவுள்ளார்.

இந்தியக் கடற்படைத் தளபதி கொழும்பில், சிறிலங்கா கடற்படைத் தளபதி மற்றும் ஏனைய படைத் தளபதிகள், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.

அத்துடன் எதிர்வரும் 22ஆம் நாள், திருகோணமலை கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் மிட்சிப்மன் பயிற்சியை முடித்து வெளியேறும்,  அணிவகுப்பு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *