மேலும்

மாகந்துர மதுஷை நாடுகடத்தியது டுபாய் – மடக்கிப் பிடித்தது சிஐடி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவனான மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிறிலங்காவில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான மாகந்துரே மதுஷ், கடந்த பெப்ரவரி மாதம் டுபாயில், ஒரு விருந்து நிகழ்ச்சியின் போது மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவரும் டுபாய் அதிகாரிகளால் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *