மேலும்

மாதம்: April 2019

தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்தது பிரித்தானியா

சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானிய தூதுவராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் அறிவித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டம்  – முடிவெடுக்க முடியாமல் திணறும் சுதந்திரக் கட்சி

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க முடியாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்

பிரித்தானிய கடற்படையின் HMS Montrose என்ற போர்க்கப்பல் நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்?

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கைதிகளே இல்லை – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 54 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீது விரைவில் விசாரணைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார் – மங்கள

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு இல்லை – மாவை

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்தால் தான் கூட்டணி – ‘கை’யை மிரட்டுகிறது ‘மொட்டு’

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தால் தான், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுக்களைத் தொடர முடியும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் 4 நைஜீரியர்கள் கைது

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.