புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் ஜயந்த ஜயசூரிய
சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக ஜயந்த ஜயசூரிய பதவியேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை அவர் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார்.
முன்னதாக இவர், சட்டமா அதிபராகப் பதவி வகித்து வந்தார். இவரை தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் முன்மொழிந்திருந்த நிலையில், அரசியலமைப்பு பேரவை அதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது,
இந்தநிலையில், சொலிசிற்றர் ஜெனரல், டப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேலதிக கணக்காய்வாளர் நாயகம், சூலானந்த விக்ரமரத்ன கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களும் இன்று சிறிலங்கா அதிபரிடம் தமது நியமனங்களைப் பெற்றனர்.