கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார் பூஜித – பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரத்ன
பதவியில் இருந்து விலக மறுத்த சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். காவல்துறை மா அதிபரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பணித்துள்ளது.
கடந்த 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை பதவி விலகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், அவர் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்குப் பணிய மறுத்து வந்த நிலையிலேயே அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
அதேவேளை, பதில் காவல்துறை மா அதிபராக, சந்தன விக்ரமரத்ன சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்
அத்துடன், முன்னாள் காவல்துறை மா அதிபர் என்.கே.இலங்ககோன், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.