முன்னாள் படைத் தளபதிகளைச் சந்தித்த மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக, முன்னாள் படைத் தளபதிகளுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலேயே, முன்னாள் படைத் தளபதிகள் நேற்று மாலை மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, முன்னாள் கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலக, முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஜெனரல் தயா ரத்நாயக்க, மற்றும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, முன்னாள் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
“தேசிய பாதுகாப்பு தொடர்பாக, எழுந்துள்ள நிலைமைகள் அடுத்து தற்போதைய நிலைமைகள் குறித்து முன்னாள் பாதுகாப்பு தளபதிகளை சந்தித்தேன். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பாக, குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை ஒன்றைத் தருமாறு கேட்டிருக்கிறேன்” என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.