கொழும்பு துறைமுக வசதிகளை அதிகரிக்கும் ஒப்பந்தம் – இரு சீன நிறுவனங்களிடம் கையளிப்பு
கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்தின் வசதிகளை தரமுயர்த்துவதற்கான பணிகள், இரண்டு சீன நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜய கொள்கலன் முனையத்தின், நங்கூரமிடும் ஆற்றலை வலுப்படுத்தும், ஒப்பந்தம், சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான, அமைச்சரவைப் பத்திரத்தை, துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்திருந்தார்.
அதேவேளை, ஜய கொள்கலன் முனையத்துக்காக, மூன்று புதிய பாரம்தூக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமும், மற்றொரு சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
25.7 மில்லியன் ரூபா செலவில், ஷங்காய் ஷென்ஹுவா கனரக தொழில் நிறுவனத்திடம் இருந்து மூன்று பாரம் தூக்கிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக ஜய கொள்கலன் முனையம் சீரமைக்கப்படவில்லை என்றும், அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.