மேலும்

மன்னார் கோட்டையை புனரமைக்க போர்த்துகல் உதவியை நாடுகிறது சிறிலங்கா

போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை, புனரமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் போர்த்துகல் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.

போர்துகல் நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சின் செயலர் தெரேசா ரிபேரியோவை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க கடந்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே, 1560ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை புனரமைப்பதற்கான திட்டம் குறித்து, முன்மொழியப்பட்டது.

போர்த்துகல் நாட்டின் சுற்றுலா பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்ப்பது குறித்தும், இரண்டு நாடுகளும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் கூட்டாகச் செயற்படுவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *