மேலும்

வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்

சதொச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை விளக்கமறியலில் வைக்க குருநாகல மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னான்டோ அமைச்சராக இருந்த காலப்பகுதியில், 5.2 மில்லியன் ரூபா முறைகேடாக கையாளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும், அவரது தனிப்பட்ட செயலர், மொகமட் லாகிர், லக்சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னான்டோ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

இந்த வழகக்கு எதிர்வரும் 11ஆம் நாளில் இருந்து, தினமும் விசாரிக்கப்படும் என்றும், அறிவித்த நீதிபதி, வழக்கு முடியும் வரை மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *