சிறிலங்கா இராணுவமும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும் இணக்கம்
சிறிலங்கா இராணுவத்தின் மனிதாபிமான ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான புதிய தலைவர் லூக்காஸ் பெட்றிடிஸ் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும், சுகாதார மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி உதவிகள், விவசாய உதவித் திட்டங்கள் குறித்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் எதிர்காலத் திட்டங்களுக்கு சிறிலங்கா இராணுவம் ஆதரவு அளிக்கும் என்றும் இராணுவத் தளபதி உறுதி அளித்துள்ளார்.