அடுத்த ஆண்டுக்குள் கண்ணிவெடிகளில் இருந்து யாழ்ப்பாணம் விடுவிக்கப்படும்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் 24 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம், 2020 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக பிரகடனம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்குள்ளாகவே அந்த இலக்கு எட்டப்பட்டு விடும்.
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மேலும், 14 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுகிறது.” என்றும் ஹலோ ட்ரஸ்ட் தெரிவித்துள்ளது.