கொச்சிக்கான பயணங்களை இடைநிறுத்தியது சிறிலங்கன் விமானசேவை
கொழும்பு- கொச்சி நகரங்களுக்கிடையிலான விமான சேவையை சிறிலங்கன் விமான சேவை வரும் சனிக்கிழமை வரை இடைநிறுத்தியுள்ளது.
கேரளாவில் கொட்டி வரும் மழையினால், கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இன்று பிற்பகல் 2 மணியுடன் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்வரும் 18 ஆம் நாள் வரை கொச்சி விமான நிலையத்துக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் கொச்சிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஆசனங்களைப் பதிவு செய்திருந்த பயணிகள், தென்னிந்தியாவின் ஏனைய விரும்பிய நகரங்களுக்கு, மேலதிக கட்டணம் எதையும் செலுத்தாமல் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.