மேலும்

இத்தாலி, ஜோர்ஜியாவுக்குப் பயணமானார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இத்தாலி மற்றும் ஜோர்ஜியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஐ.நா உணவு  மற்றும் விவசாய நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள உலக வன வார நிகழ்வு மற்றும் குழு அமர்வுகளில் பங்கேற்பதற்காக, இத்தாலியின் றோம் நகருக்கு சிறிலங்கா அதிபர் நேற்று  புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அவர், நாளை மறுநாள் ஜோர்ஜியாவுக்குச் செல்லவுள்ளார்.

ஜோர்ஜியாவில்  நடைபெறவுள்ள திறந்த அரசாங்க பங்குடைமை பூகோள உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் நாள் தொடக்கம், 19ஆம் நாள் வரை சிறிலங்கா அதிபர் ஜோர்ஜியாவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *