மேலும்

அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

“அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்காவின் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.

அவர்களின் வெளிவிவகாரக் கொள்கைகள் சற்று கூடியதாக, குறைந்ததாக அல்லது சமமானதாகவே உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடனான சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தூதுவர் ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, மரியாதை நிமித்தமாக, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். இது ஒரு வழக்கமாக சந்திப்பு மட்டுமே.” என்று கூறியுள்ளார்.

ஒரு கருத்து “அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை”

  1. ‌மன‌ோ says:

    அந்தப் பருப்பு இந்தப் பான‌ையில் அவியாது என்ப‌த‌ை ‌த‌ெரிந்து ‌கா‌ெண்டிருப்பார்கள்.

Leave a Reply to ‌மன‌ோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *